யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்

யெகோவாவைப் புகழ்வதற்கும் அவரை வணங்குவதற்கும் இந்தப் பாடல்களைப் பாடி மகிழுங்கள். இதைப் பாடிப் பழக, அதனுடைய இசையையும் பாடல் வரிகளையும் டவுன்லோட் செய்யுங்கள்.

பாடல் 136

கடவுளுடைய ஆட்சி வருக!

இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் விதமாகவும் யெகோவாவை போற்றிப் புகழும் விதமாகவும் இந்த ராஜ்ய பாடல் இருக்கிறது.

பாடல் 137

தைரியத்தைத் தாருங்கள்

யெகோவாவுடைய பெயரை பற்றி சாட்சி கொடுக்க தைரியம் தருமாறு கேட்டு அவரிடம் வேண்டி பாடுகிற பாடல்.

பாடல் 138

யெகோவா என்பதே உங்கள் பெயர்

யெகோவாவுடைய மகத்தான பெயரை புகழுங்கள், அவர் உன்னதமானவர் என்று ஜனங்கள் தெரிந்துகொள்ளட்டும்.

பாடல் 139

உறுதியாய் நிற்க உதவும்!

யெகோவா தரும் பாதுகாப்புக்காகவும் கிறிஸ்தவ ஓட்டத்தில் உண்மையோடு நிலைத்திருக்க அவர் தரும் உதவிக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.

பாடல் 140

பயனியரின் வாழ்க்கை

யெகோவாமீது நீங்கள் வைத்திருக்கிற அன்பைத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்குத் திருப்தி தருகிற வேலையையும் நீங்கள் மிகவும் நேசிக்கிற வாழ்க்கையையும் பற்றிச் சொல்லுங்கள்.

பாடல் 141

நல்லவர்களை தேடுவோம்

இது ஒரு சந்தோஷமான பாடல். மக்கள் மேல் நாம் வைத்திருக்கிற அன்பைப் பற்றியும் கடவுளை நேசிக்கிற மக்களை நாம் எப்படி ஆர்வமாகத் தேடுகிறோம் என்பதைப் பற்றியும் இந்தப் பாடல் சொல்கிறது.

பாடல் 142

எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!

யெகோவாவின் நல்ல குணத்தைப் பற்றியும், எல்லா விதமான ஆட்களும் கடவுளுடைய நண்பர்களாக ஆவதற்கு நாம் எப்படி உதவி செய்கிறோம் என்பதைப் பற்றியும் பாடுங்கள்.

பாடல் 143

இருண்ட உலகில் பேரொளி!

நாம் சொல்லும் நற்செய்தி நம்பிக்கை தீபம் போலே சுடரொளி வீசும்.

பாடல் 144

உயிர் காக்கும் நற்செய்தி

முடிவு வருவதற்கு முன்பே கடவுளுடைய செய்தியை அறிவிக்க வேண்டும்.

பாடல் 145

ஊழியத்துக்குத் தயாரிப்போம்

வீட்டுக்குள் இருந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால், நாம் முயற்சி செய்தால் ஊழியத்துக்குப் புறப்பட்டு போக பலம் கிடைக்கும்.

பாடல் 146

எனக்கே செய்தீர்கள்

அபிஷேகம் செய்யப்பட்ட தன் சகோதரர்களுக்குக் காட்டப்பட்ட அன்பும் ஆதரவும் தனக்கே காட்டப்பட்டதாக இயேசு கருதுகிறார்.

பாடல் 147

விசேஷ சொத்து

அபிஷேகம் செய்யப்பட்ட தன்னுடைய மகன்களை யெகோவா நேசிக்கிறார். அவர் விரும்புவதைச் செய்ய அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

பாடல் 148

ஒரே மகனையே தந்தீர்கள்

ஈடில்லாத பரிசுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். அந்தப் பரிசு எல்லாருக்கும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

பாடல் 149

மீட்புவிலைக்காக நன்றி!

அன்பின் எல்லை, இயேசுவின் தியாகம், யெகோவாவுக்கு என்றென்றும் நன்றியோடு இருக்க வேண்டும்.

பாடல் 150

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

யெகோவா விரும்புகிற விதத்தில் அவருக்குச் சந்தோஷமாக சேவை செய்ய நீங்கள் விரும்புவதைக் காட்டுங்கள்.

பாடல் 151

கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்

கிறிஸ்துவின் சகோதரர்களை யெகோவா பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பிய பின், கிறிஸ்துவின் வெற்றியிலும் வெகுமதியிலும் அவர்கள் பங்குகொள்வார்கள். அந்த நாளுக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.

பாடல் 152

எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

வாழ்க்கையின் கவலைகளால் பயம் நம்மைக் கவ்வும்போது கடவுள் நமக்கு பலமாகவும் நம்பிக்கையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்.

பாடல் 153

உன் நெஞ்சம் துள்ளாதோ?

நல்மனமுள்ளவர்களின் இதயத்தை எட்டுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது உங்கள் உள்ளம் துள்ளவில்லையா?

பாடல் 154

சகித்தே ஓடுவோம்!

இறுதிவரை கஷ்டங்களை சகிக்கவும் யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்யவும் இந்தப் பாடல் உதவுகிறது.