Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதகுமாரன்

மனிதகுமாரன்

சுவிசேஷப் புத்தகங்களில், இந்த வார்த்தை சுமார் 80 தடவை இருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இந்தப் பூமியில் பிறந்ததன் மூலம், இயேசு ஒரு மனிதராகவே ஆனார், அவர் வெறுமனே மனித உடலில் வந்த ஒரு தேவதூதர் அல்ல என்பதை இந்த வார்த்தை காட்டுகிறது. தானியேல் 7:13, 14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றுவார் என்பதையும் இந்த வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. எபிரெய வேதாகமத்தில், எசேக்கியேலுக்கும் தானியேலுக்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும், இவர்கள் சொன்ன செய்தியின் சொந்தக்காரரான கடவுளுக்கும் இருக்கும் வித்தியாசத்தைத் தெளிவாய்க் காட்டுவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—எசே 3:17; தானி 8:17; மத் 19:28; 20:28.