எரேமியா 5:1-31

5  எருசலேமின் வீதிகளில் போய்த் தேடிப் பாருங்கள். நாலாபக்கங்களிலும் சுற்றிப் பாருங்கள். பொது சதுக்கங்களில் வலைவீசித் தேடுங்கள்.நியாயத்தோடும் உண்மையோடும் நடக்கிற யாராவது இருக்கிறார்களா என்று பாருங்கள்.+அப்படி ஒருவரையாவது கண்டுபிடித்தீர்கள் என்றால்,நான் எருசலேமை மன்னித்துவிடுகிறேன்.   “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி அவர்கள் சத்தியம் செய்தாலும், பொய் சத்தியம்தான் செய்கிறார்கள்.+   யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+ இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+ அவர்கள் தங்களுடைய இதயத்தை* பாறையைவிட கடினமாக்கினார்கள்.+அவர்கள் திருந்தவே இல்லை.+   அப்போது நான் என்னுடைய மனதில், “இவர்கள் உண்மையிலேயே தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த ஜனங்கள். யெகோவாவின் வழிகளையும் சட்டதிட்டங்களையும் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை.அதனால்தான் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்கள்.   நான் இவர்களுடைய தலைவர்களிடம் போய்ப் பேசிப் பார்க்கிறேன்.யெகோவாவின் வழிகளையும் சட்டதிட்டங்களையும்அவர்களாவது பின்பற்றியிருக்க வேண்டும்.+ ஆனால், எல்லாருமே தங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு,கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்” என்று சொல்லிக்கொண்டேன்.   அதனால்தான், காட்டிலுள்ள சிங்கம் அவர்கள்மேல் பாய்கிறது.பாலைநிலத்தில் உள்ள ஓநாய் அவர்களைப் பீறிப்போடுகிறது.அவர்களுடைய நகரவாசல்களில் சிறுத்தை காத்திருக்கிறது. வெளியே வருகிற எல்லாரையும் கடித்துக் குதறுகிறது. ஏனென்றால், அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.+   நான் உன்னை* எப்படி மன்னிப்பேன்? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள்.தெய்வமே இல்லாதவற்றின் மேல் சத்தியம் செய்கிறார்கள்.+ அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கொடுத்தேன்.ஆனால், அவர்கள் எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.விபச்சாரியின் வீட்டுக்குத் திரண்டு போகிறார்கள்.   காம வெறிகொண்ட குதிரைகளைப் போலஇன்னொருவனின் மனைவிக்காக அலைகிறார்கள்.+   “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா? இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?”+ என்று யெகோவா கேட்கிறார். 10  “எருசலேமின் திராட்சைத் தோட்டத்து மதில்களை இடித்துப் போடுங்கள்.ஆனால், எல்லாவற்றையும் அடியோடு அழித்துவிடாதீர்கள்.+ திராட்சைக் கொடிகளின் புதிய கிளைகளை முறித்துப் போடுங்கள்.ஏனென்றால், அவை யெகோவாவுக்குச் சொந்தமானவை அல்ல. 11  இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும்எனக்குப் பெரிய துரோகம் செய்துவிட்டார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+ 12  “அவர்கள் யெகோவாவின் பேச்சை மதிக்காமல்,‘அவர் ஒன்றும் செய்யப்போவதில்லை.*+ நமக்கு எந்த ஆபத்தும் வராது.போரினாலோ பஞ்சத்தினாலோ நாம் சாக மாட்டோம்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 13  தீர்க்கதரிசிகளின் இதயத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை.அவர்கள் வெற்று வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்களுடைய வார்த்தைகளைப் போலவே அவர்களும் உதவாமல் போய்விடுவார்கள்!” 14  பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: “இவர்கள் இப்படிச் சொல்வதால்,நான் உன்* வாயில் வைத்த என் வார்த்தைகளைத் தீ போல ஆக்குவேன்.+அந்தத் தீ இந்த ஜனங்களைச் சுட்டுப்பொசுக்கும்.இவர்கள் விறகுபோல் எரிந்துபோவார்கள்.”+ 15  “இஸ்ரவேல் ஜனங்களே, நான் தொலைதூரத்திலிருந்து ஒரு தேசத்தை உங்களுக்கு எதிராக வர வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார். “அது பழங்காலத்தில் உருவான தேசம். காலம்காலமாக இருக்கிற தேசம்.அந்தத் தேசத்து ஜனங்களின் பாஷை உங்களுக்குத் தெரியாது.அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாது.+ 16  அவர்களுடைய அம்புக்கூடு,* திறந்த சவக்குழியைப் போன்றது.அவர்கள் எல்லாருமே போர்வீரர்கள். 17  அவர்கள் உங்களுடைய விளைச்சலையும் உணவையும் தின்றுதீர்ப்பார்கள்.+ உங்கள் மகன்களையும் மகள்களையும் கொன்றுவிடுவார்கள். உங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கைப்பற்றுவார்கள். உங்கள் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் வெட்டிப்போடுவார்கள். நீங்கள் நம்பியிருக்கிற மதில் சூழ்ந்த நகரங்களைத் தாக்கி நாசமாக்கிவிடுவார்கள்.” 18  “அந்தச் சமயத்தில்கூட நான் உங்களை அடியோடு அழித்துவிட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 19  “அவர்கள் உன்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவா ஏன் எங்களுக்கு இப்படியெல்லாம் செய்துவிட்டார்?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவரை விட்டுவிட்டு வேறு தெய்வங்களுக்கு அடிபணிந்ததால், உங்கள் தேசத்திலிருந்து வேறு தேசத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஜனங்களுக்கு அடிபணிந்து நடப்பீர்கள்’+ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.” 20  யாக்கோபின் வம்சத்தாரிடமும்,யூதாவில் இருக்கிறவர்களிடமும் இப்படிச் சொல்: 21  “புத்தி இல்லாத முட்டாள் ஜனங்களே, கேளுங்கள்!+ உங்களுக்குக் கண் இருந்தும் நீங்கள் பார்ப்பது இல்லை.+காது இருந்தும் கேட்பது இல்லை.+ 22  ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா? நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்? கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+ 23  இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள், அடங்காதவர்கள்.*என் வழியை விட்டுவிட்டு அவர்களுக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.+ 24  அவர்கள் தங்களுடைய உள்ளத்தில், “இப்போது நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கலாம்” என்று சொல்வதே இல்லை.“அவர்தான் அந்தந்த காலத்தில் மழை பெய்ய வைக்கிறார்,முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருகிறார்,அறுவடை செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தருகிறார்”+ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. 25  நீங்கள் குற்றம் செய்ததால்தானே இதெல்லாம் உங்களுக்குக் கிடைக்காமல் போனது?நீங்கள் பாவங்கள் செய்ததால்தானே நல்லதையெல்லாம் அனுபவிக்க முடியாமல் போனது?+ 26  என் ஜனங்களின் நடுவில் கெட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பறவைகளைப் பிடிக்கிற வேடர்களைப் போலப் பதுங்கியிருக்கிறார்கள். பயங்கரமான கண்ணிகளை வைக்கிறார்கள். மனுஷர்களைப் பிடிக்கிறார்கள். 27  கூண்டு நிறைய பறவைகள் இருப்பது போல,அவர்களுடைய வீடு நிறைய திருட்டுப்பொருள்கள்* இருக்கின்றன.+ இப்படிக் குறுக்கு வழியில்தான் அவர்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் சம்பாதித்திருக்கிறார்கள். 28  அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+ 29  “இதையெல்லாம் நான் தட்டிக்கேட்க வேண்டாமா? இப்படிப்பட்ட ஒரு தேசத்தை நான் தண்டிக்க வேண்டாமா?” என்று யெகோவா கேட்கிறார். 30  “அதிர்ச்சி தரும் படுமோசமான காரியம் தேசத்தில் நடந்துவருகிறது: 31  தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+ ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
நே.மொ., “முகத்தை.”
அதாவது, “எருசலேமை.”
அல்லது, “அப்படி ஒருவர் இல்லவே இல்லை.”
அதாவது, “எரேமியாவின்.”
அம்புகளை வைப்பதற்கான சாதனம்.
வே.வா., “இந்த ஜனங்களின் இதயம் பிடிவாதமுள்ளது, அடங்காதது.”
வே.வா., “மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்த பொருள்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா