யோபு 10:1-22
10 பின்பு அவர்,
“எனக்கு வாழ்க்கை கசக்கிறது.+
என் குறைகளை வாய்விட்டுச் சொல்லப்போகிறேன்.
என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கப்போகிறேன்.
2 நான் கடவுளிடம், ‘என்னைக் குற்றவாளி என்று சொல்லிவிடாதீர்கள்.
என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள் என்று முதலில் விளக்குங்கள்’ என்று சொல்வேன்.
3 அதோடு, ‘என்னைக் கொடுமைப்படுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்?நீங்கள் படைத்த மனுஷன்மேல்+ நீங்களே வெறுப்பைக் கொட்டுவதால் என்ன பிரயோஜனம்?கெட்டவர்களுடைய திட்டங்களை நீங்கள் ஆதரிக்கலாமா?
4 உங்களுடைய கண்கள் என்ன மனுஷக் கண்களா?சாதாரண மனுஷன் பார்ப்பது போலவா நீங்கள் பார்க்கிறீர்கள்?
5 உங்கள் வாழ்நாள் மனுஷனின் வாழ்நாளைப் போன்றதா?அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவு காலம்தான் நீங்களும் வாழ்கிறீர்களா?+
6 பின்பு ஏன் என்னிடம் குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கிறீர்கள்?நான் பாவம் செய்கிறேனா என்று ஏன் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்?+
7 நான் குற்றம் செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமே.+யாராலும் என்னை உங்கள் கையிலிருந்து காப்பாற்ற முடியாதே.+
8 உங்கள் கைகளால்தானே என்னைப் பார்த்துப் பார்த்து உண்டாக்கினீர்கள்?+இப்போது ஏன் என்னை அடியோடு அழிக்கப் பார்க்கிறீர்கள்?
9 என்னை மண்ணால் உருவாக்கியதைத் தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.+இப்போது என்னை மண்ணுக்கே அனுப்ப நினைக்கிறீர்களே!+
10 என் தாயின் வயிற்றுக்குள் நீங்கள் என்னை வைக்கவில்லையா?*அங்கே எனக்கு உருவம் கொடுக்கவில்லையா?*
11 எலும்புகளாலும் தசைநாண்களாலும் எனக்கு வடிவம் கொடுத்தீர்களே.தோலாலும் சதையாலும் என்னைப் போர்த்தினீர்களே.+
12 எனக்கு வாழ்வு தந்து, மாறாத அன்பைக் காட்டினீர்களே.என் உயிரை* பொத்திப் பொத்திப் பாதுகாத்தீர்களே.+
13 ஆனாலும், எனக்குக் கஷ்டங்களைக் கொடுக்க ரகசியமாகத் திட்டம் போட்டீர்கள்.
இந்த எல்லா கஷ்டங்களையும் கொடுத்தது நீங்கள்தான் என்று எனக்குத் தெரியும்.
14 நான் பாவம் செய்தால், நீங்கள் கவனிக்காமல் இருக்க மாட்டீர்கள்.+என் குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட மாட்டீர்கள்.
15 நான் குற்றவாளி என்றால், ஒழிந்துபோகிறேன்!
நான் நிரபராதி என்றாலும், என்னால் தலைநிமிர முடியவில்லை.+ரொம்பவே அசிங்கப்பட்டுவிட்டேன், நொந்துபோய்விட்டேன்.+
16 நான் தலைநிமிர்ந்தாலும், சிங்கத்தை வேட்டையாடுவதுபோல் என்னை வேட்டையாடுகிறீர்கள்.+உங்கள் பலத்தை மறுபடியும் என்மேல் காட்டுகிறீர்கள்.
17 எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிறைய பேரைக் கொண்டுவருகிறீர்கள்.என்மேல் இன்னும் அதிகமாகக் கோபத்தைக் கொட்டுகிறீர்கள்.எனக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வருகிறது.
18 என் தாயின் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளியே கொண்டுவந்தீர்கள்?+
யாரும் பார்ப்பதற்கு முன்பே நான் செத்துப்போயிருக்கக் கூடாதா?
19 இப்படிப்பட்ட ஒருவன் இல்லாமலே போயிருப்பானே!நான் கருவறையிலிருந்து நேராகக் கல்லறைக்குப் போயிருப்பேனே’ என்று கடவுளிடம் சொல்வேன்.
20 இன்னும் கொஞ்ச நாள்தானே வாழப்போகிறேன்?+ அவர் என்னை விட்டுவிடக் கூடாதா?கொஞ்ச நேரமாவது அவர் என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன்.*+
21 அதன் பிறகு, இருட்டிலும் இருட்டான* இடத்துக்குப்+ போய்விடுகிறேன்.அங்கிருந்து திரும்பிவர மாட்டேன்.+
22 அது பயங்கர இருட்டான ஒரு தேசம்.கும்மிருட்டும் குழப்பமும் நிறைந்த தேசம்.அங்கே வெளிச்சம்கூட இருட்டாகத்தான் தெரியும்” என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “நீங்கள் என்னைப் பால் போல ஊற்றவில்லையா?”
^ நே.மொ., “பாலாடைக் கட்டி போல உறைய வைக்கவில்லையா?”
^ வே.வா., “உயிர்மூச்சை.”
^ வே.வா., “கொஞ்சம் சந்தோஷப்படுவேன்.”
^ வே.வா., “இருட்டும் சாவின் நிழலும் உள்ள.”