யோவான் எழுதியது 3:1-36

3  நிக்கொதேமு+ என்ற ஒரு பரிசேயர் இருந்தார்; அவர் யூதர்களுடைய தலைவர்களில் ஒருவர்.  அவர் ஒருநாள் ராத்திரி இயேசுவிடம் போய்,+ “ரபீ,+ நீங்கள் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்கிற இந்த அடையாளங்களைக்+ கடவுளுடைய உதவி இல்லாமல் யாராலும் செய்ய முடியாது”+ என்று சொன்னார்.  அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மறுபடியும் பிறக்கவில்லை*+ என்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பார்க்க முடியாது”+ என்று சொன்னார்.  அதற்கு நிக்கொதேமு, “வயதான பிறகு ஒருவனால் எப்படிப் பிறக்க முடியும்? இரண்டாவது தடவை அவன் தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாது, இல்லையா?” என்று கேட்டார்.  அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தண்ணீராலும்+ கடவுளுடைய சக்தியாலும் ஒருவன் பிறக்கவில்லை என்றால்,+ அவன் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது.  மனுஷனால் பிறக்கிறவன் மனுஷனுடைய பிள்ளை, கடவுளுடைய சக்தியால் பிறக்கிறவன் கடவுளுடைய பிள்ளை.  ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உங்களிடம் சொன்னதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்.  காற்று அதற்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது, அதன் சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளுடைய சக்தியால் பிறந்திருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.  அதற்கு நிக்கொதேமு, “இதெல்லாம் எப்படி நடக்கும்?” என்று கேட்டார். 10  அப்போது இயேசு, “இஸ்ரவேல் மக்களுக்குப் போதகராக இருந்தும்கூட இது உங்களுக்குத் தெரியவில்லையா? 11  உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றித்தான் நாங்கள் பேசுகிறோம், பார்த்ததைப் பற்றித்தான் சாட்சி சொல்கிறோம். ஆனால், நீங்கள் எல்லாரும் எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை. 12  பூமிக்குரிய விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால், பரலோகத்துக்குரிய விஷயங்களைப் பற்றிச் சொல்லும்போது எப்படி நம்புவீர்கள்? 13  எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை.+ ஆனால், மனிதகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.+ 14  வனாந்தரத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல்+ மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.+ 15  அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.+ 16  கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல்*+ விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து,+ இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார். 17  இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல, மீட்பதற்கே கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார்.+ 18  அவர்மேல் விசுவாசம் வைக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை.+ விசுவாசம் வைக்காதவனோ, கடவுளுடைய ஒரே மகனின்* பெயரில் விசுவாசம் வைக்காததால் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டான்.+ 19  நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுதான்: இந்த உலகத்துக்கு ஒளி வந்திருக்கிறது.+ ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே விரும்புகிறார்கள். 20  கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான். 21  நீதியான செயல்களைச் செய்கிறவனோ, தன்னுடைய செயல்கள் கடவுளுடைய விருப்பத்தின்படி இருக்கின்றன என்பது வெளிப்படுவதற்காக ஒளியிடம் வருகிறான்+” என்று சொன்னார். 22  இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள். அங்கே அவர் சீஷர்களோடு சில காலம் தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+ 23  அப்போது, யோவானும் சாலிமுக்குப் பக்கத்தில் அயினோன் என்ற இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.+ மக்கள் அங்கே போய் ஞானஸ்நானம் பெற்றுவந்தார்கள்.+ 24  அதுவரை யோவான் சிறையில் அடைக்கப்படவில்லை.+ 25  தூய்மைச் சடங்கு பற்றி யோவானுடைய சீஷர்களுக்கும் ஒரு யூதனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. 26  அவர்கள் யோவானிடம் வந்து, “ரபீ, யோர்தானுக்கு அக்கரையில் உங்களோடு ஒருவர் இருந்தாரே, அவரைப் பற்றி நீங்களும் சாட்சி கொடுத்தீர்களே,+ இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள். 27  அதற்கு யோவான், “பரலோகத்திலிருந்து அருளப்பட்டால் தவிர யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. 28  ‘நான் கிறிஸ்து அல்ல,+ ஆனால் அவருக்குமுன் அனுப்பப்பட்டவன்’+ என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29  மணமகள் யாருக்குச் சொந்தமோ அவர்தான் மணமகன்.+ இருந்தாலும், மணமகனின் தோழன் அவர் பக்கத்தில் நின்று அவர் பேசுவதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் எனக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது. 30  அவருடைய செயல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்க வேண்டும், ஆனால் என்னுடைய செயல்கள் குறைந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று சொன்னார். 31  மேலிருந்து வருகிறவர்+ எல்லாருக்கும் மேலானவர். ஆனால், பூமியிலிருந்து வருகிறவர் பூமியிலிருந்து வருவதால் பூமிக்குரிய விஷயங்களைப் பேசுகிறார். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரையும்விட மேலானவர்.+ 32  தான் பார்த்ததையும் கேட்டதையும் பற்றி அவர் சாட்சி கொடுக்கிறார்,+ ஆனால் ஒருவனும் அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை.+ 33  அவருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டவனோ, கடவுள் உண்மையானவர் என்பதை முத்திரைபோட்டு உறுதிப்படுத்துகிறான்.+ 34  கடவுளால் அனுப்பப்பட்டவர் கடவுளுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்.+ ஏனென்றால், கடவுள் அவருக்குத் தன்னுடைய சக்தியை அளவில்லாமல் கொடுக்கிறார்.* 35  தகப்பன் தன்னுடைய மகன்மேல் அன்புகாட்டி,+ எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்படைத்திருக்கிறார்.+ 36  மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது,+ அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “மேலிருந்து பிறக்கவில்லை.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகன்மேல்.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகனின்.”
வே.வா., “கண்டிக்கப்பட.”
வே.வா., “சக்தியை அளந்து அளந்து கொடுப்பதில்லை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா