தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம் 3:1-16

3  இது நம்பகமான விஷயம்: கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர்+ சிறந்த வேலையை விரும்புகிறார்.  அதனால், கண்காணியாக இருப்பவர் குற்றம்சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை உடையவராகவும், பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவராகவும், தெளிந்த புத்தியுள்ளவராகவும்,*+ ஒழுங்குள்ளவராகவும், உபசரிக்கும் குணமுள்ளவராகவும்,+ கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும்+ இருக்க வேண்டும்;  குடிகாரராகவும்,+ மூர்க்கமானவராகவும்* இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நியாயமானவராகவும்,*+ தகராறு செய்யாதவராகவும்,+ பண ஆசையில்லாதவராகவும்,+  தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராகவும், நல்ல நடத்தையும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளை+ உடையவராகவும் இருக்க வேண்டும்.  (ஒருவருக்குத் தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியவில்லை என்றால் கடவுளுடைய சபையை எப்படிக் கவனித்துக்கொள்வார்?)  அதோடு, அவர் சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்கக் கூடாது.+ ஏனென்றால், அவருக்குத் தலைக்கனம் வந்துவிடலாம், இதனால் பிசாசுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை அவருக்கும் கிடைத்துவிடலாம்.  அதுமட்டுமல்ல, வெளியாட்களிடமும்* நல்ல பெயர் எடுத்தவராக இருக்க வேண்டும்.+ அப்போதுதான், அவர் பழிச்சொல்லுக்கு ஆளாகாமலும், பிசாசின் வலையில் விழாமலும் இருப்பார்.  அதேபோல், உதவி ஊழியர்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாகவும், இரண்டு விதமாகப் பேசாதவர்களாகவும்,* திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்களாகவும், அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்களாகவும்,+  விசுவாசத்தின் பரிசுத்த ரகசியத்தைச் சுத்த மனசாட்சியோடு+ காத்துக்கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். 10  அதோடு, இவர்கள் தகுதியுள்ளவர்களா என்று முதலில் சோதிக்கப்பட வேண்டும்; இவர்கள்மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றால்+ இவர்கள் உதவி ஊழியர்களாகச் சேவை செய்யலாம். 11  அதேபோல், பெண்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாகவும், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசாதவர்களாகவும்,+ பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.+ 12  உதவி ஊழியர்கள் ஒரே மனைவியை உடைய கணவர்களாகவும், தங்கள் பிள்ளைகளையும் வீட்டாரையும் நல்ல விதத்தில் நடத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். 13  நல்ல விதத்தில் ஊழியம் செய்கிற ஆண்கள் நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதோடு கிறிஸ்து இயேசுவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தைப் பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுகிறார்கள். 14  சீக்கிரத்தில் நான் உன்னிடம் வருவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்; 15  ஒருவேளை நான் வருவதற்குத் தாமதமானால், கடவுளுடைய வீட்டாரிடம்+ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நீ தெரிந்துகொள்வதற்காக இதையெல்லாம் எழுதுகிறேன். அந்த வீட்டாரே உயிருள்ள கடவுளுடைய சபையாக, சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறார்கள். 16  கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார்,+ பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்,+ தேவதூதர்களுக்குக் காணப்பட்டார்,+ மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்,+ உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார்,+ மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’

அடிக்குறிப்புகள்

வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையுள்ளவராகவும்; விவேகமுள்ளவராகவும்.”
வே.வா., “மற்றவர்களை அடிக்கிறவராகவும்.”
அதாவது, “வளைந்துகொடுப்பவராகவும்.”
வே.வா., “கிறிஸ்தவ சபையில் இல்லாத ஆட்களிடமும்.”
நே.மொ., “இரட்டை நாக்கு இல்லாதவர்களாகவும்.” வே.வா., “பொய் பேசாதவர்களாகவும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா