காண்பாரே நம்மை!
டவுன்லோட்:
லீட் ஷீட்
1. கண் விழித்தாலே அச்சமோ நெஞ்சத்தில்.
தனிமையாக நாம் என்றும் இல்லை.
கருவினில் கூட தேவன்,
கண் பார்வையில் நாம் தோன்றினோம்.
காண்பவர் நம் அருகே!
(பல்லவி)
காண்பாரே யெகோவா!
உன் உள்ளம் உன் ஏக்கம்,
உன் சோகத்தை மகிழ்ச்சியை,
நீ ஆசையாய் தருவதை.
காண்பாரே யெகோவா!
உன் த்யாகம் உன் மௌனம்,
உன் நெஞ்சம் தான் துடிப்பதை.
உன் அருகே, தேவன்!
2. மகன் வாழ ஏங்கிடும் தந்தை போல்,
நாம் வாழ்ந்திட அவர் ஏங்குவார்.
நம் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும்,
நம்மைத் தாங்குவார் நம் தேவனே!
சந்தேகமே வேண்டாமே!
(பல்லவி)
காண்பாரே யெகோவா!
உன் உள்ளம் உன் ஏக்கம்,
உன் சோகத்தை மகிழ்ச்சியை,
நீ ஆசையாய் தருவதை.
காண்பாரே யெகோவா!
உன் த்யாகம் உன் மௌனம்,
உன் நெஞ்சம் தான் துடிப்பதை.
உன் அருகே, தேவன்!
(பிரிட்ஜ்)
நாம் தத்தளிக்கும் நேரம், நம் தேவனிடம் மன்றாடி நாம் கேட்போம்... கேட்போம்.
தேவனின் பாசந்தான், தள்ளாடும் நம்மைத் தாங்குமே.
கலங்க வேண்டாமே! தேவன் காண்கிறார் நம்மை.
(பல்லவி)
காண்பாரே யெகோவா!
உன் உள்ளம் உன் ஏக்கம்,
உன் சோகத்தை மகிழ்ச்சியை,
நீ ஆசையாய் தருவதை.
காண்பாரே யெகோவா!
உன் த்யாகம் உன் மௌனம்,
உன் நெஞ்சம் தான் துடிப்பதை.
உன் அருகே,
(பல்லவி)
காண்பாரே யெகோவா!
உன் உள்ளம் உன் ஏக்கம்,
உன் சோகத்தை மகிழ்ச்சியை,
நீ ஆசையாய் தருவதை.
காண்பாரே யெகோவா!
உன் த்யாகம் உன் மௌனம்,
உன் நெஞ்சம் தான் துடிப்பதை.
உன் அருகே, தேவன்!